Sunday, September 12, 2010

முன் ஜென்மம்

ஒரு மனிதனுக்கு அவ்னுடைய வாழ்வின் முற்பகுதியில் எப்படி வாழ்ந்தானோ அதன் பிரதிபலிப்புதான் பிற்பகுதி வாழ்க்கை அதை விடுத்து முன் ஜென்மம் பின் ஜென்மம் என்பதெல்ல்லாம் கிடையாது என்பது என்னுடைய கருத்து
இளமையில் உடல் திராணியிருந்த காலத்தில் நல்லவனாக, நாலுபேருக்கு உதவுபவனாக இருந்தால் அதன் பலனை பிற்பகுதியில் அனுபவிக்க முடியும் அப்படியில்லாமல் தான்தோன்றித்தனமாக டாஸ்மாக்கில் பகுதிநேரம் பரத்தையர் மடியில் பகுதி நேரம் என்று கழித்துவிட்டு வீட்டுக்கு போனவுடன் மனைவியை அடித்து மகனை மயிரைப் பிடித்து உலுக்கி செய்யாத கூத்தெல்லாம் செய்துவிட்டு மீண்டும் டாஸ்மாக் கடையில் ஐக்கியமாகி விடுவதுமாக இருப்பவனுடைய பிற்பகுதி வாழ்க்கை நரகமாகத்தான் இருக்கும்
சம்பாதிக்க வேண்டிய நேரத்தில் சம்பாதிக்காமல் கைமுதலையும் வாலிபகாலத்தில் தொலைத்துவிட்டு இளமைக் கொழுப்பெல்லாம் கரைந்தபிறகு மனைவி மக்களின் ஆதரவில்லாமல் பொருளாதாரப் பலமுமில்லாமல் கடைசியில் ஒரு வாட்ச்மேன் வேலை கிடைத்தாலாவது பரவாயில்லை என்று அலையும் நேரத்தில் கூட இந்த நிலைமைக்குக் காரணம் நம்முடைய கடந்தகால விளையாட்டுத்தானே என்று நினைக்காமல் இதெல்லாம் முன்ஜென்மத்துப் பாவம் என்று சொன்னால் அது முன்ஜென்மத்துப் பாவம் அல்ல நம் இளமையில் செய்த பாவம்
நம்முடைய பெற்றோரை பாசத்துடன் கணிவோடு கவனித்திருந்தால் மட்டுமே நம் பிள்ளைகள் நம்மைப் பார்க்கும். வயதானவர்களை பெரியவர்களை எப்படி கவனிக்க வேண்டும் எப்படி அவர்களிடம் ப்ண்பாக பணிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது பாலபாடமாக அவர்கள் மனதில் வேரோடியிருக்கும். நம்மையும் நம் பிள்ளைகள் அன்பாக அரவணைத்துச் செல்லும்.
அவ்வாறில்லாமல் மாமியாரும் மருமகளும் மயிர் பிடித்துக் கொள்வதும் அப்பனும் மகனும் அடித்துக் கொள்வதுமாக இருந்தால் கடைசி நாட்களில் ஓரமாய் ஒதுக்குத் திண்ணையில் கிடக்க வேண்டியதுதான் என்ன அந்தக்காலத்தில் ஒதுக்குத்திண்ணை இந்தக்காலத்தில் முதியோரில்லம் அப்படி ஒதுக்குத்திண்ணையில் கிடக்கும்போது நம்முடைய பெற்றோர் படுத்திருந்த இடம் இதுதானே என்று நினைக்காமல் இதெல்லாம் முன் ஜென்மத்து வினை என்று சொன்னால் அது முன் ஜென்மத்து வினையல்ல இளமையில் செய்த வினை
மீண்டும் சந்திப்போம்












No comments:

Post a Comment