Thursday, September 9, 2010

முதல் அனுபவம்

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்
முதலில் சுயவிபரம் சொல்லிவிடுகிறேன் நித்தியானந்தம் பியூசி ஆங்கிலம் மண்டையில் ஏறாததால் தொடரவில்லை விவசாயம்தான் தொழில் (பிறகென்ன என்னுடைய படிப்புக்கு கலெக்டர் உத்தியோகமா கிடைக்கும்?) வேறு பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை சரி மேட்டருக்கு வருகிறேன்
எனக்கு இருபத்தி நாலு வயதில் திருமணம் அழகான பெண் மனைவியாக வாய்த்தாள் (சும்மாவா! ஏழில் குரு இருக்குதப்பா) ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்தது குழந்தை பிறந்து மூன்றாவது நாள் எனது தாத்தாவும் நானும் என் தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடம் சென்றோம் ஜோதிடரின் வீட்டிலோ வறுமை தாண்டவமாடியது ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பமாக இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் அவருடைய இல்லம் தொட்டிக்கட்டு வீடு கோவை மாவட்டத்தில் தொட்டிக்கட்டு வீடு என்றால் சுமார் மூவாயிரம் சதுரடி பரப்பளவில் நான்குபுறமும் ஓடு வேய்ந்து நடுவில் தொட்டி அமைத்து அதில் விழும் மழைநீரை குழாய் மூலமாக வெளிவாசலில் கொண்டுபோய் விட்டிருப்பார்கள் மற்ற மாவட்டங்களில் என்ன பெயரோ தெரியாது இங்கே தொட்டிக்கட்டு வீடு
தாத்தாவுக்கு ந்ன்கு பரிச்சியமானவர் என்பதால் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கொள்ளுப்பேத்தி பிற்ந்திருப்பதாகச் சொல்லவும் நேரத்தைக் கேட்டார் சொன்னேன் "ம்..ரோஹிணி நட்சத்திரம் பூமி வாங்குவாள்"என்றார் இவரது நேரமே சரியில்லாமலிருக்கும் போல இருக்கே இவர் என் மகளுக்கு நேரம் பார்த்துச் சொல்கிறாரா?என்று கிண்டலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன் ராசிக்கட்டம் அம்சம் மற்றும் பல கண்க்குகளைப் போட்டுவிட்டு நிமிர்ந்தார் "உங்க பேத்தீது அருமையான ஜாதகம்ங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கும்ங்க ஆராய்ச்சிக்கெல்லாம் போகுமுங்க"என்றார் "பொட்டப்புள்ளெ போய் எனத்த ஆராய்ச்சி ப்ண்ணுது மேல சொல்லுங்க"என்றார் தாத்தா
ஜோதிடர் கேட்டார் "இந்த மூணுநாள்லெ ஏதாச்சும் பூமி வாங்கியிருக்கிறீங்களா?"
"இல்லீங்களே"இது தாத்தா
"ஏண்டா நீயோ உங்கப்பனோ ஏதாச்சும் பேசினீங்களோ?"என்னைப் பார்த்து தாத்தா கேட்டார்
"இல்லீங்கையா நாங்க ஒண்ணும் பேசலீங்களே"என்று நான் சொன்னேன்
(கொங்குநாட்டு மக்கள் பெரும்பாலும் தாத்தாவை ஐயா என்றுதான் சொல்லுவோம்)
"இந்தப் பொண்ணு பொற்ந்து இத்தனை நாழிகையிலெ பூமி அமைஞ்சிருக்கணும் நீங்க ஊர் போய் பாருங்க நான் இந்த ஜாதகத்தை எழுதி வச்சிருக்கேன்" என்று சொல்லி அனுப்பினார்

நாங்கள் வீடு வந்து சேர்ந்ததும் அப்பா சொன்னார் "பெரியப்பா மகன் வந்திருந்தான் தெக்கால தோட்டத்தெ வித்துப்போடலாம்னு நெனைக்கறேன் நீயே வச்சுக்கண்ணான்னு சொன்னான் சரி வச்சுக்கறேன் வெலயச்சொல்லுன்னு சொன்னேன் உங்கிட்ட நான் எப்பிடி வெலெ சொல்லறது நீயே ஒரு வெலெயப் போட்டு வச்சுக்கன்னு சொல்லிட்டுப் போறான்"

இதைக் கேட்டதும் மலைத்துப் போய் நின்று விட்டேன் இது சாத்தியம்தானா? எப்படி அவ்வள்வு துல்லியமாகச் சொல்ல முடிந்தது? இருபத்தி நான்கு வருடத்திற்க்கு முன்பு செல்போனா இருந்தது? ட்டோய் ட்டொய் என்று பத்து நெம்பரைத் தட்டி என்னோட அப்பாவைக் கூப்பிட்டு "என்ன்ப்பா உங்க மகன் ஜோசியம் பார்க்க வந்திருக்கு என்ன சொல்லி அனுப்பறது"என்று கேட்டுக் கொண்டு சொல்வதற்கு. எல்லாமே கணக்குத்தானே

என்னுடைய ஒன்றுவிட்ட சகோதிரர் ஒருவர் ஜோதிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் நாங்கள் பார்த்த ஜோதிடரைப் பற்றியும் தெரிந்தவர் அவரிடம் அந்த ஜோதிடரைப் பற்றிக் கேட்டேன் ஜோதிடத்தில் அவர் பெரிய மேதை ஆனால் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்கமுடியவில்லை என்று சொன்னார் அன்றிலிருந்துதான் நான் ஜோதிடத்தை நம்ப ஆரம்பித்தேன் இப்போது எனது மகள் எம்.எஸ்.சி ஜீன் டெக்னாலஜி முடித்துவிட்டு பி.எச்.டி படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாள் மீண்டும் சந்திப்போம்



1 comment:

  1. ஆக்கம் நன்றாக இருக்கிறது. இதை அப்படியே மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி வையுங்கள். வகுப்பறை வாரமலரில் பதிவிடுகிறேன். நிறையப் பேரை உங்கள் ஆக்கம் சென்றடையும்
    அன்புடன்
    வகுப்பறை வாத்தியார்

    ReplyDelete